11 வாரங்களின் பின் சீனாவின் வுஹான் பிரதேசத்திலிருந்து மக்கள் வெளியேற அனுமதியளித்துள்ளது சீன அரசு.
அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரத்துக்குள் 65,000 பேர் வெளியேறியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரதேசத்திலிருந்தே முதலில் கொரோனா வைரஸ் பரவியிருந்த அதேவேளை தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே பெருமளவு மரணங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment