முழு பேருவளையிலும் 25,000 பேர் வரை தனிமைப்படுத்தலில் - sonakar.com

Post Top Ad

Wednesday 8 April 2020

முழு பேருவளையிலும் 25,000 பேர் வரை தனிமைப்படுத்தலில்


முஸ்லிம் பிரதேசம் மாத்திரமன்றி பேருவளையின் அனைத்து பகுதிகளிலுமாக சுமார் 25,000 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.



இதுவரை ஐந்து கிராமங்கள் முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அனைத்து பகுதிகளிலிருந்தும் 15 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, 900 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment