நாடளாவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நிரந்தர வருமானம் இல்லாத குடும்பங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவை பேருந்து சாரதிகள் மற்றும் நடாத்துனர்களுக்கும் வழங்குவதற்கு அரசாங்க மட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தற்சமயம் பல ஊர்களில் கிராம சேவை அதிகாரியூடாக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா சூழ்நிலையில் வருமானமற்று மக்கள் முடங்கிப் போயுள்ளதன் பின்னணியில் தற்காலிக நிவாரணமாக இந்நிதியுதவி வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment