இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய ஐவரும் தம்பதிவ சென்று திரும்பிய பெண்ணினால் பண்டாரநாயக்க மாவத்தையில் தொற்றுக்குள்ளானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் குறித்த பெண் தொடர்பில் 58 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு பிலியந்தலையைச் சேர்ந்த நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மொத்த எண்ணிக்கை 304ஆக இருந்ததுடன் நேற்றைய தினம் மாத்திரம் 33 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment