ஊரடங்கு விதி மீறலில் ஈடுபட்ட 22,000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
மார்ச் மாதம் 20ம் திகதியிலிருந்து இது வரையான காலப்பகுதியில் குறித்த கைதுகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன விளக்கமளித்துள்ளார்.
பெருந்தொகை வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, கொரோனா சூழ்நிலை முடிந்ததும் அவை மீளக் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment