கொரோனா அபாயத்தின் பின்னணியில் ஏப்ரல் 20ம் திகதி வரையான எதிர்வரும் இரு வாரங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பாடுகள் அவசியப்படுவதாயின் தேவையாயின் இன்னும் கடுமையான சட்டங்களை அமுல் படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
இக்காலப் பகுதியை கொரோனா மீளெழுச்சிக் காலமாகக் கருத வேண்டும் எனவும் அதற்கேற்ப நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை அடிப்படை சமூக இடைவெளிக்கான விதிமுறைகளை ஆறு மாதங்களுக்காவது தொடரும் தேவையிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அமைச்சருக்கு அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment