இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளான இடங்களில் 49 தொற்றாளர்களைக் கொண்ட கொழும்பு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 பேரும், யாழ் மாவட்டத்தில் 16 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ரத்னபுரி, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, கேகாலை, பதுளை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment