இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருந்த 199 பேரில் 55 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
7 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 137 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு மேலும் 224 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், ஊரடங்கை மதித்து தொடர்ந்தும் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment