பிலியந்தலயிலிருந்து 11 குடும்பங்கள் முகாமுக்கு அனுப்பி வைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 21 April 2020

பிலியந்தலயிலிருந்து 11 குடும்பங்கள் முகாமுக்கு அனுப்பி வைப்பு


நேற்றைய தினம் பிலியந்தல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியிலிருந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 66 பேர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த நபர் அப்பகுதியின் முக்கிய பொது சேவை ஊழியர்கள் வீடுகளுக்கும் சென்றிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் மேலதிக எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன் கொள்வனவு செய்து அதனை விற்பனை செய்து வந்த ஒருவரே இவ்வாறு நேற்று தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment