கொரோனா பாதிப்புக்குள்ளான இருவர் கவலைக்கிடம் - sonakar.com

Post Top Ad

Saturday 21 March 2020

கொரோனா பாதிப்புக்குள்ளான இருவர் கவலைக்கிடம்



இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளான இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேற்றிரவு வரை 72 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் 13 பேருக்கு பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

அங்கொட ஐ.டி.எச்சில் 88 பேர் உட்பட இரு நூற்றுக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வரும் அதேவேளை இருவர் உச்ச கட்ட காய்ச்சல் நிலையை அடைந்திருப்பதாகவும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment