கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மேலும் இருவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், இலங்கையில் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் 104 பேர் வரை தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பல இடங்களில் கிராம மட்டத்திலான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment