சீனாவின் வுஹான் பிரதேசத்தில் ஆரம்பித்த கொரோனா பரவல் இன்று உலகின் பல பாகங்களிலும் மரண அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில் உலகளாவிய மரண எண்ணிக்கை 20,000 த்தை தாண்டியுள்ளது.
450,000 பேர் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சுமார் 110,000 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் புதன்கிழமை புதிதாக கொரோனா பாதிப்பெதுவும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஸ்பெய்னில் பெருந்தொகை மக்கள் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment