30 மில்லியன் ரூபா நிதி முறைகேட்டு வழக்கின் பின்னணியில் நாமல் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த பிரயாணத் தடையை ஜுலை 23ம் திகதி வரை நீக்கியுள்ளது நீதிமன்றம்.
கவர்ஸ் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இடம்பெற்ற இந்த நிதி முறைகேட்டு விவகாரத்தின் பின்னணியில் நாமல் மற்றும் நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கடந்த ஆட்சியிலிருந்து தொடர்ந்து வரும் இவ்வழக்கின் பின்னணியிலேயே நாமலுக்கு வெளிநாட்டுப் பிரயாணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment