வங்காள விரிகுடா, பங்களதேஷ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 24 இலங்கை மீனவர்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது பங்களதேஷ்.
வாசனா-01, வாசனா-03 மற்றும் சஞ்சு புதா என பெயரிடப்பட்ட வள்ளங்களில் பயணித்த மீனவர்களே இவ்வாறு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய - இலங்கை எல்லைகளில் இவ்வாறான அத்துமீறல்கள், கைதுகள் இடம்பெறுவதே வழமையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment