ஹொரன இலிம்ப பகுதியில் நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள இன்னொரு வீடொன்றின் மீதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பிறிதொரு முச்சக்கர வண்டி மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழக்கம் போல மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவிக்கும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment