இம்முறை பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுனவுக்கு நல்ல நாளாக சோதிடர்கள் கணித்துள்ள ஏப்ரல் 25ம் திகதி நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் எதிர்வரும் 2ம் திகதியுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு மார்ச் 2ம் திகதியோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஐந்து வருட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்காத 60 பேருக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment