பெரமுன பிரச்சாரகரும் சர்ச்சைப் பேர்வழியுமான இராஜ் வீரரத்னவைத் தான் ஒரு தடவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது மறுபுறத்தில் நாமல் ராஜபக்ச பதிலளித்ததாகவும் அந்த நாள் இடம்பெற்ற உரையாடலின் 18 நிமிட ஒலிப்பதிவு தன்னிடம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.
நாடாளுமன்றில் தனது உரையின் போது இத்தகவலை வெளியிட்டுள்ள அவர், தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதற்கு தன்னை ஊக்கப்படுத்தியது மஹிந்த ராஜபக்சவே எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அவதிப்படும் பெண்கள் தொடர்பிலான சர்ச்சையொன்றின் போது தொலைபேசி உரையாடலை பதிவு செய்யுமாறு தனக்கு மஹிந்த ராஜபக்ச 'அறிவுரை' வழங்கியதாகவும் அன்றிலிருந்தே தான் அனைத்து உரையாடல்களையும் பதிவு செய்ய ஆரம்பித்ததாகவும் ரஞ்சன் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment