நிசாந்த சில்வாவை நாடு கடத்த கோரவுள்ள இலங்கை அரசு - sonakar.com

Post Top Ad

Saturday 14 December 2019

நிசாந்த சில்வாவை நாடு கடத்த கோரவுள்ள இலங்கை அரசு


நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக நம்பப்படும் முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிசாந்த சில்வா திருப்பியனுப்புமாறு சுவிஸ் அரசை இலங்கை அரசு கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



குறித்த நபரின் வெளியேற்றத்தின் பின்னணியிலேயே தூதரக ஊழியர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அரசாங்கம் அதனை மறுத்துள்ளதுடன் அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதற்கான ஆதாரமில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment