தூதரக ஊழியர் கடத்தல்: BBSக்கு சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 4 December 2019

தூதரக ஊழியர் கடத்தல்: BBSக்கு சந்தேகம்!



சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல், இலங்கை மீது சர்வதேச அழுத்தத்தை பிரயோகிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது பொது பல சேனா.



குறித்த சம்பவம் ஒரு நாடகம் என இவ்வமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ள அதேவேளை, சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ ரீதியில் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.

கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் தூதரக ஊழியர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆட்சியில் போன்று வெளிநாட்டு சக்திகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முயல்வதாக பொது பல சேனா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment