அவர்களால் என்னை தூக்கிலிட முடியாது: தயாசிறி பாய்ச்சல் - sonakar.com

Post Top Ad

Tuesday 2 July 2019

அவர்களால் என்னை தூக்கிலிட முடியாது: தயாசிறி பாய்ச்சல்


நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு தான் எப்படியும் சமூகமளிக்கப் போவதில்லையென தெரிவிக்கும் ஸ்ரீலசுக செயலாளர் தயாசிறி ஜயசேகர, அவ்வாறு தான் செல்லாவிட்டாலும் தன்னைத் தூக்கிலிட முடியாது என்கிறார்.



நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது சிறப்புரிமைகளைத் தான் பாதுகாத்துக்ள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், குற்றச்சாட்டுகள் உள்ள ரிசாத் பதியுதீன் போன்றவர்களை நல்லவர்களாக வர்ணம் பூசும் நிகழ்ச்சி நிரலே விசாரணைக்குழு எனவும் தெரிவிக்கிறார்.

ஏலவே விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறியிருந்த தயாசிறி, தான் மீண்டும் அழைப்பு வந்தாலும் செல்லப் போவதில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment