ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Wednesday 17 July 2019

ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை: மைத்ரி


ஈஸ்டர் தாக்குதலில் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


குறித்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவருமே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மைத்ரி தெரிவிக்கிறார்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என அண்மைக்காலமாக ஜனாதிபதி தெரிவித்து வருகின்ற அதேவேளை, ஒக்டோபர் வரை நீதிமன்றம் ஊடாக அதற்கான இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment