பொலிஸ் அழைப்பைப் புறக்கணிக்கும் மது மாதவ! - sonakar.com

Post Top Ad

Monday 20 May 2019

பொலிஸ் அழைப்பைப் புறக்கணிக்கும் மது மாதவ!


மினுவங்கொட வன்முறைகள் தொடர்பில் பொலிசார் விசாரணைக்கு அழைத்தும் மது மாதவ புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


அன்றைய தினம் பொலிஸ் நிலையம் சென்ற மது மாதவ தாம் 3 மணி நேரம் காத்திருந்தும் வாக்குமூலம் பெறப்படவில்லையென தெரிவித்திருந்தார். எனினும், காலை 10 மணிக்கு வரும் படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் 2.30 அளவிலேயே வந்ததாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றும் இன்றும் பொலிசார் அழைப்பு விடுத்த அழைப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.b

No comments:

Post a Comment