சொத்து சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் குருநாகல் மருத்துவர் கைது - sonakar.com

Post Top Ad

Saturday 25 May 2019

சொத்து சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் குருநாகல் மருத்துவர் கைது



ரிசாத் பதியுதீன் கட்சி சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டவரும் மருத்துவருமான ஷாபி (42) சந்தேகத்துக்கிடமான வகையில் சொத்து சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஏலவே, ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment