மியன்மாரிலிருந்து ஈஸ்டர் 'சந்தேக' நபர் தலைமறைவு - sonakar.com

Post Top Ad

Saturday 25 May 2019

மியன்மாரிலிருந்து ஈஸ்டர் 'சந்தேக' நபர் தலைமறைவு


ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவர் மியன்மாரில் தங்கியிருப்பதாக ஸ்ரீலங்கா அரசினால் வழங்கப்பட்ட தகவலின் பின்னணியில் அங்கு விசா இன்றி தங்கியிருந்த இலங்கை முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். 


எனினும், குறித்த நபரோடு நாட்டுக்குள் நுழைந்த வேறு ஒருவரே சந்தேக நபர் எனவும் அந்த நபர் தற்போது மியன்மாரில் இல்லையென்பது கண்டறியப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment