பிரகீத் எக்னலிகொட விவகாரம்: மேலும் ஒரு இராணுவ அதிகாரி கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 20 September 2018

பிரகீத் எக்னலிகொட விவகாரம்: மேலும் ஒரு இராணுவ அதிகாரி கைது!


ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன விவகாரம் தொடர்பில் மேலும் இராணுவ புலனாய்வு உயரதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



2010ம் ஆண்டு மஹிந்த அரசில் காணாமல் செய்யப்பட்ட பிரகீத் எக்னலிகொட விவகாரத்தின் பின்னணியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பல இராணுவ அதிகாரிகளை கைது செய்திருந்தனர்.

இவ்வழக்கின் போது அடாவடியாக நீதிமன்றுக்குள் நுழைந்து சாட்சியை அச்சுறுத்திய மற்றும் நீதிமன்றை அவமதித்ததன் பின்னணியேலே ஞானசாரவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment