"தேசிய சாதனை மடல்" நூல் வெளியீட்டு விழா - sonakar.com

Post Top Ad

Sunday 5 August 2018

"தேசிய சாதனை மடல்" நூல் வெளியீட்டு விழா


அனஸ் அப்பாஸின் "தேசிய சாதனை மடல்" நூல் வெளியீடு, நாளை (07) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை, கொழும்பு - 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. 

தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் இச்சிறப்பு நூல் வெளியீட்டு விழா நிகழ்வில், தேசிய ஊடக மத்திய நிலையத் தலைவரும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், தேர்தல்கள் திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.எம். முஹம்மத், பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.எஸ்.எம். முஹம்மத் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

அரிய சாதனையை முடித்து, அடுத்த சாதனைக்காய் அமைதியாய் பயணிக்கும் நான் கண்ட பொக்கிஷங்கள் பற்றிய மடலாய், நூல் ஆசிரியர் இந்நூலை எழுதுகிறார்.

   
நூல் ஆசிரியர் அனஸ் அப்பாஸ் தேடிப் பிடித்து எழுதிய இலைமறை காய்  சாதனையாளர்களை "மீள் பார்வை"  பத்திரிகையின் மூலம் அறிமுகம் செய்து வந்ததுடன்,  அவ்வாறு  அறிமுகம் செய்த பலரையும் நூல் ஆசிரியர் ஒன்று சேர்த்து வரலாற்று ஆவனமாகப் பதியப்பட்டு,  புத்தக உருவமாக  வெளியிட்டிருப்பதே இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது. 


-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment