இலங்கையில் மத சுதந்திரம் உயர்ந்த நிலையில் உள்ளது: அரசு! - sonakar.com

Post Top Ad

Saturday 28 July 2018

இலங்கையில் மத சுதந்திரம் உயர்ந்த நிலையில் உள்ளது: அரசு!



இலங்கையில் மத சுதந்திரம் உயர்ந்த நிலையில் உள்ளதாகவும் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தொடர்ந்தும் திடமாக உள்ளதாகவும் வொஷிங்டனில் இடம்பெற்ற மாநாட்டில் வைத்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத சுதந்திரத்துக்கான உயர் நிலை மாநாட்டில் வைத்தே வெளியுறவுத்துறை அமைச்சு சார்பாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருடமும் அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத தாக்குதல் சம்பவங்களின் போது இலங்கை காவல்துறை கை கட்டிப் பார்த்திருந்தமை நினைவுகூறத்தக்கது.

No comments:

Post a Comment