லஞ்சம்: முன்னாள் அக்குறணை பிரதேச செயலாளருக்கு சிறை! - sonakar.com

Post Top Ad

Thursday 19 July 2018

லஞ்சம்: முன்னாள் அக்குறணை பிரதேச செயலாளருக்கு சிறை!


ஐந்து லட்ச ரூபா லஞ்சம் பெற்ற விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அக்குறணை பிரதேச செயலாளர் M,H.M. நியாசுக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


2013ம் ஆண்டு லஞ்சம் பெற்ற விவகாரத்தின் பின்னணியிலான வழக்கிலேயே இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி செயலக பிரதானி, அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் ஆகியோரும் லஞ்சம் பெற்ற நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment