ரணிலை நீக்கக் கோரி கண்டியிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரை - sonakar.com

Post Top Ad

Thursday 29 March 2018

ரணிலை நீக்கக் கோரி கண்டியிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரை



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கக் கோரி கண்டியிலிருந்து கொழும்புக்கான பாத யாத்திரையொன்று ஏற்பாடு செய்துள்ளது கூட்டு எதிர்க்கட்சி.

ஏப்ரல் 4ம் திகதி நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் மார்ச் 31ம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் 4 கொழும்பில் முடிவுறும் வகையில் இப்பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கூட்டாட்சிக்கு எதிராகவே ஏலவே மஹிந்த அணியினர் கண்டி - கொழும்பு பாதயாத்திரையொன்றை நடாத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment