கண்டி : பாதிப்புகளை மதிப்பிட அமைச்சர்கள் குழு - sonakar.com

Post Top Ad

Tuesday 27 March 2018

கண்டி : பாதிப்புகளை மதிப்பிட அமைச்சர்கள் குழு



கண்டி வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம், டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலம் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு பிரதமர் ரணில் விக்‌கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளில் பின்னர், அது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (26) திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்.



அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில், அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர்  ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சட்ட  மா அதிபர், பொலிஸ் மா அதிபர், கண்டி மாவட்ட அரசாங்க அதிபர், மதிப்பீட்டு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

No comments:

Post a Comment