கொரோனா 'பானி' குடித்த ஒருவருக்கு வைரஸ் தொற்று! - sonakar.com

Post Top Ad

Monday 28 December 2020

கொரோனா 'பானி' குடித்த ஒருவருக்கு வைரஸ் தொற்று!

 


கொரோனா தொற்று அண்டாத வகையில் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து என விளம்பரப்படுத்தப்பட்டிருந்த பானியைக் குடித்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வரகாபொல, ஒன்னாபிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள பன்னிரண்டு பேரில் இவர் ஒருவர் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


குறித்த திரவத்தினை 'கொரோனா' தடுப்பு மருந்தென அத தெரன மிகத் தீவிரமாக விளம்பரப்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment