சுற்றுலா பயணிகள் வராவிட்டாலும் கொரோனா பரவும்: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Monday 28 December 2020

சுற்றுலா பயணிகள் வராவிட்டாலும் கொரோனா பரவும்: பிரசன்ன

  


நாட்டில் கொரோனா தொற்றுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கும் தொடர்பில்லையென்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.


சுற்றுலாத்துறை கடும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அவசியம் என தெரிவிக்கின்ற அவர், அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வராவிட்டாலும் கூட நாட்டில் கொரோனா பரவல் இருப்பதாக தெரிவிக்கிறார்.


பாதுகாப்பான முறையில் ரஷ்யாவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள முதற் கட்ட சுற்றுலாப் பயணிகள் ஏலவே திட்டமிடப்பட்டுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதே திட்டம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment