வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெல்லவீதிய மற்றும் மருதானை உட்பட வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏனைய பகுதிகளில் அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிக தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment