ஸ்ரீலங்கன் முகாமையாளர் குற்றவாளியென இந்திய நீதிமன்றம் அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 16 September 2020

ஸ்ரீலங்கன் முகாமையாளர் குற்றவாளியென இந்திய நீதிமன்றம் அறிவிப்பு



ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் இந்திய பிராந்திய முகாமையாளரான லலித் டிசில்வாவைக் குற்றவாளியாகக் கண்டுள்ளது டில்லி நீதிமன்றம்.


எனினும், குறித்த நபர் இல்லாதமை மற்றும் தற்போதைய கொரோனா சூழ்நிலையால் தண்டனை அறிவிப்பு பின்போடப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கன் விமான சேவையின் டில்லி அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணொருவரை தரக்குறைவான முறையில் நடாத்தியது மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்தமையின் பின்னணியில் இவ்வழக்கு விசாரணை இடம்பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment