ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மேலும் இருவர் நீக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday 28 June 2020

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மேலும் இருவர் நீக்கம்!


எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயாதீன குழுவாக போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள மேலும் இருவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.

புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கற்பிட்டி பிரதேச சபையின் ஐ.தே.க உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.சி சலாஹுதீன் மற்றும் யு.எம் அக்மல் ஆகியோருக்கு ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்பத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment