ஹர்ஜான் அலெக்சான்டராக மாறியுள்ள அர்ஜுன் மகேந்திரன் - sonakar.com

Post Top Ad

Tuesday 16 June 2020

ஹர்ஜான் அலெக்சான்டராக மாறியுள்ள அர்ஜுன் மகேந்திரன்


இலங்கை மத்திய வங்கி பிணை முறி ஊழல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் தனது பெயரை ஹர்ஜான் அலெக்சான்டராக மாற்றியுள்ளதாக இலங்கை அரசுக்கு அறிவித்துள்ளது இன்டர்போல்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது இவ்விபரம் நீதி மன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், தொடர்ந்தும் மகேந்திரன் தேடப்படுவதாகவும் அவரை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு நவம்பர் மாதம் 17ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment