சவப்பெட்டிகளை தயார் செய்து விட்டே நாடு திறக்கப்பட்டுள்து: ஹரிசன் - sonakar.com

Post Top Ad

Tuesday 12 May 2020

சவப்பெட்டிகளை தயார் செய்து விட்டே நாடு திறக்கப்பட்டுள்து: ஹரிசன்


கொரோனா சூழ்நிலையிலிருந்து நாடு விடுபடுவதற்கான முறையான திட்டங்கள் வகுக்கப்படவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன்

மக்கள் மத்தியில் முறையாக அச்சம் களையப்படவோ, மாவட்ட ரீதியிலான சுகாதார நிலவரம் கணிப்பிடப்படவோ இல்லையெனவும், போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் சரியாகத் திட்டமிடப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

ஏலவே 1000 சவப்பெட்டிகளை தயார் செய்து விட்டே அரசாங்கம் நாட்டை திறந்துள்ளதாகவும் இன்னும் பாதுகாப்பான சூழல் உருவாகவில்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment