குவைத் - கட்டாரிலிருந்து வந்த 480 பேருக்கு கோரோனா: பவித்ரா - sonakar.com

Post Top Ad

Sunday 31 May 2020

குவைத் - கட்டாரிலிருந்து வந்த 480 பேருக்கு கோரோனா: பவித்ரா


குவைத் மற்றும் கட்டாரிலிருந்து நாடு திரும்பியோர் 480 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.

குவைத்திலிருந்து வந்த 330 பேர் மற்றும் கட்டாரிலிருந்து வந்த 150 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள அவர், மேலும் 42 பேர் வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் மொத்தமாக வெளிநாடுகளிலிருந்து வந்த 522 பேர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

இதேவேளை, இன்றைய தினத்தின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 1633 ஆக உயர்ந்துள்ளமை குறப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment