இலங்கையில் முடங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகள், விமான சேவைகள் இயங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலேயே நாடு திரும்புமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் பிரதான விமான நிலையங்கள் தொடர்ந்தும் இயங்கி வரும் நிலையில் வெளிநாடுகளில் முடங்கியிருப்போர் நாடு திரும்புமாறு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் நிலைமை தீவிரமடையுமாக இருந்தால் சுகாதா மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டு நாடு திரும்ப முயற்சி செய்யுமாறு இலங்கைக்கான பிரித்தானிய பிரித்தானிய தூதர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment