சாய்ந்தமருது மாணவனின் தானியங்கி கை-கழுவும் இயந்திரம் - sonakar.com

Post Top Ad

Friday 10 April 2020

சாய்ந்தமருது மாணவனின் தானியங்கி கை-கழுவும் இயந்திரம்



கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான அடிப்படைப் பழக்கவழக்கங்களுள் 20 விநாடிகள் சவர்க்காரம் அல்லது மாற்றீடான திரவங்கள் கொண்டு கை கழுவுதல் ஊக்குவிக்கப்படுகிறது.



இந்நிலையில், சூரிய சக்தியின் உதவியில், கால் அழுத்தத்தில் தானாக இயங்கும் கை கழுவும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் சாய்ந்தமருதைச் சேர்ந்த மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத்.

இதற்கு முன்னரும் சில புதிய சாதனங்களை கண்டுபிடித்து மேலும் பல முயற்சிகளை இம் மாணவன் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment