மஹரகம: கொரோனாவை மறைத்த நபரால் வைத்தியர்கள் தாதியருக்கு சிக்கல் - sonakar.com

Post Top Ad

Monday 6 April 2020

மஹரகம: கொரோனாவை மறைத்த நபரால் வைத்தியர்கள் தாதியருக்கு சிக்கல்


தான் கொரோனாவால் பாதிப்புற்றிருப்பதை மறைத்து மஹரகம புற்று நோய் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றுள்ளதன் பின்னணியில் அங்கு பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர் தனிமைப்படுத்தலுக்குள்ளாக நேர்ந்துள்ளது.



குறித்த சந்தர்ப்பத்தில் அங்கு கடமையில் இருந்த 04 வைத்தியர்கள் மற்றும் 06 தாதியர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை 176 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள அதேவேளை 33 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment