நாளை முதல் சட்டமா அதிபர் திணைக்களம் மீளியங்க நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday 26 April 2020

நாளை முதல் சட்டமா அதிபர் திணைக்களம் மீளியங்க நடவடிக்கை


நாளை 27ம் முதல் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்த சட்டமா அதிபர் திணைக்களம் இயங்க ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



திணைக்களத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக திணைக்களம் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஊழியராகப் பணியாற்றிய ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment