ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Sunday 26 April 2020

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா


ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்விருவரும் வெலிசர கடற்படை முகாமிலிருந்து விடுமுறையில் வந்திருந்த சிப்பாய்கள் என தெரிவிக்கப்படுகிறது.



அம்பலந்தொட்ட - பெரகம மற்றும் சூரியவெவ பகுதிகளைச் செர்ந்த இருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்படை முகாமிலிருந்து 37 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு விடுமுறையில் சென்றுள்ள அதேவேளை நேற்றைய தினம் 14 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இருவருக்கே தொற்றிருப்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment