இலங்கையில் சமூக மட்டத்திலான கொரோனா தொற்று முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க.
எனினும், இது முழுமையாக கொரோனாவிலிருந்து விடுபட்டதாக அமையாது எனவும் தற்சமயம் அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஊடாகவே தொற்று தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் பரிசோதனைகளைக் குறைத்து கொரோனா தாக்கம் குறைந்து விட்டதாக தெரிவிப்பதாக சம்பிக்க ரணவக்க விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment