பத்தேகம பகுதியில் இராணுவ அதிகாரியொருவர் வாள் வெட்டுக்கு இலக்கான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
அம்பெகம பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமுற்ற அதிகாரி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை தாக்குதல் நடாத்திய நபர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்கியவரும் காயப்பட்ட அதிகாரியும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
No comments:
Post a Comment