இலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த மரியோ ஹேமல் சில்வா என தகவல் அறியமுடிகிறது.
58 வயதான குறித்த நபரும் மனைவியும் கொரோனா பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனைவி குணமடைந்து நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இன்று மரியோ சில்வா உயிரிழந்துள்ளதுடன் அவரது உடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment