அக்கரைப்பத்து நகரில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை இன்று மாலை 6 மணியளவில் கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாடு ஒன்றுக்கு சென்று திரும்பியிருந்த குறித்த நபருக்கு வைரஸ் பரிசோதனை ஏலவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment