கொழும்பு: கொரோனா நிவாரண நிதியை 3 நாட்களுக்குள் வழங்க தீர்மானம் - sonakar.com

Post Top Ad

Tuesday 7 April 2020

கொழும்பு: கொரோனா நிவாரண நிதியை 3 நாட்களுக்குள் வழங்க தீர்மானம்


கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் வழங்கி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர  ஆணையாளர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


மேலும், மார்ச் மாதத்திற்கான நிவாரணத் தொகையை அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கும் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment