ஜா-எல: கைதான 28 பேரில் 6 பேருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Saturday 11 April 2020

ஜா-எல: கைதான 28 பேரில் 6 பேருக்கு கொரோனா


ஜாஎல பகுதியில் கொரோனா பரிசோதனையைத் தவிர்த்து வந்த நிலையில் கைதான 28 பேரில் 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



குறித்த நபர்கள் தொடர்பிலிருந்த வாடகை வாகன சாரதியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிட்டிருந்த போதிலும் அதனை மீறி உலவித்திரிந்த நிலையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இப்பின்னணியில் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment