மொனராகல மாவட்டத்தில் 2245 பேரளவில் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாடுகள் மற்றும் வெளி பிரதேசங்களில் தொழில் புரிந்து விட்டு திரும்பியோர் என பலர் இதில் உள்ளடங்குவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா பாதிப்புக்குள்ளான சந்தேகத்தின் பேரில் மூவர் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment